39வது புத்தகக் கண்காட்சி

39வது புத்தகக் கண்காட்சி, வார வேலை நாள் என்பதால் கூட்டம் அதிகமாக இல்லை, வழக்கம் போல் பதிப்பாளர்கள், கடை அமைத்தோர்களுக்கு பெரிய வியாபாரம் இல்லை என்று படித்தது (சமஸ் – தமில் ஹிந்து) சரியே.

தீவுத்திடலுக்கு இரண்டு வாசல் உண்டு, பபாசி இணையத்திலோ வேறு எங்கும் இதை பற்றி தெளிவாக குறிப்பிடப்படவில்லை, நிறைய பேர் (!!) அண்ணாசாலை வழியாக வந்து ஏமாற்றத்துடன் மறுமடியும் துறைமுகம் வழியாக போக வேண்டியாதாகிவிட்டது. பஸ் வசதி சரியாக இல்லை என்பது என் எண்ணம். ஒய்எம்சிஏவில் இருந்து மாற்றியது எதுக்கு? அங்கவே வசதியாக இருந்தது, அங்கே இருந்திருந்தால் நிறைய விற்பனை ஆகியிருக்குமோ என்னமோ? இவ்வளவு செலவு செய்கிறவர்கள் இதெல்லாம் யோசிச்சாங்ககளா?

சரி, இந்த தடவை, காந்தி மற்றும் அவரது வழியில் வந்த வினோபாவே மற்றும் ஜே.சி.குமரப்பா மற்றும் ரமணர் பற்றிய புத்தகங்கள்.